கூடி வாழ்ந்தால் கோடி நன்மை கீழ் படியாத கோழிக்குஞ்சுகள் ஒர் ஊரிலுள்ள, ஒரு வீட்ல ஒரு கோழியின் குடும்பம் வாழ்ந்து வந்தது. அந்த அம்மா, அப்பா கோழிகளுக்கு நான்கு அழகிய கோழிக்குஞ்சுகள். பார்க்க மிகவும் அழகாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். அந்த குஞ்சுகளுக்கு, ஆபத்து பல இருப்பதை உணர்ந்த அந்த அப்பா , அம்மா கோழிகள் தங்கள் நான்கு குஞ்சுகளை மிகவும், கவனமாக வளர்த்து வந்தாங்க. அதனால அந்த கோழிக்குஞ்சுகளுக்கு, ஆபத்துகளை எடுத்து கூறி அறிவுரை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஆனா நம்ம கோழிக்குஞ்சுகளுக்கு அறிவுரைன்னலே அலர்ஜி. அவைகள் இரவு முழுவதும் கூண்டுக்குள் இருக்கும், விடிந்ததும் கூண்டைவிட்டு வெளியே வந்து விளையாடும். அவர்களுடைய அப்பா, அம்மா கூடவே வருவது , அந்த குஞ்சுகளுக்கு பிடிக்கவே பிடிக்காது. ஆனா கோழிகளுக்கு, அங்குள்ள நாய், பூனை, மற்றும் பருந்திடம் தங்கள் குஞ்சுகள் மட்டிக்கொல்லுமோ என்ற பயம் இருப்பதால், அந்த கோழிக்குஞ்சுகளை, திட்டி கொண்டே இருப்பாங்க. மேலும், வெயிலிலும், மழையிலும் அவைகள் தன் குஞ்