வெற்றிக் கனி உன் கையில் ஒரு கிராமத்தில், ஒரு விவசாயி தன் மனைவி மற்றும் தன் இரு மகன்களுடன் வாழ்ந்து வந்தான். அந்த விவசாயி நன்கு உழைத்து விவசாயம் செய்து மேலும் நிறைய நிலங்களை வாங்கி நல்ல வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தான். தன்னுடைய மகன்கள் வளர்ந்தவுடன், அவர்களையும் விவசாயத்திற்கு உதவ பழக்கினான்.தினமும் காலை மூவரும், வயலுக்கு சென்று உழைத்து, மாலை தான் வீடு திரும்புவர். சிறு வயதிலிருந்தே தன் தந்தை சிறிய அளவில் நிலம் வைத்து உழைத்து நிறைய நிலங்களை வாங்கியதால் விவசாய தொழிலை பெரிய மகன் சோமு நன்கு கற்றுக் கொண்டு தன் தந்தைக்கு உதவியாக இருந்தான். ஆனால் கடைசி மகன் ராமு, அவர்கள் குடும்பம் நல்ல வசதியில் இருந்த தருவாயில் பிறந்ததால் கடின உழைப்பு என்பது அவனுக்கு கஷ்டம் தான். தன் தந்தை சொல்வதை செய்வான், பெரிய ஈடுப்பாட்டை காட்டிக் கொள்ளமாட்டான். நாட்கள் நகர இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம், ஆனால் அதற்கு முன்பு அவர்களுக்கு தன் சொத்தை பிரித்து கொடுக்க வேண்டுமே என்ற யோசனையில் மூழ்கினார்