நன்றிக்கடன் “இரண்டு நாளா இந்த மழை நிக்காம , என் பொழப்புக்கு வேட்டு வைச்சிட்டு, அரசாங்கம் வேற ரெட் அலெர்ட் அறிவிச்சிட்டு, யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க வருமானத்துக்கு என்ன பண்ண”, பிரசவத்துக்கு வந்திருக்கிற மவளுக்கு வாய்க்கு ருசியா ஆக்கிப் போடணும், எந்நேரமும் பிரசவம் ஆகலாம், கையில பணம் வேணும், என்ன செய்ய போறேன் ஆண்டவா”, என்று தனக்கு தானே பேசியப்படி, தன் வலையை சீர் செய்துக்கொண்டிருந்தான் கோவிந்தன். “ஏம்பா, நீங்க வாடிக்கையா இறால், மீன், நண்டு கொடுப்பீங்களே ஜெயராமன் சார் அவர ஒரு மாசமா காணோமா, ஏதோ பிசினஸ் ல நஷ்டம் ஏற்பட்டதால ஊற விட்டு போயிட்டராமே, அப்படியா,” என்று டீய ஆத்தியப்படி பிரசவத்துக்கு வந்த மகள் பொன்னி அருகில் வந்தாள். “ஆமாம்மா, அந்த கொடுமைய ஏன் கேக்குற, அந்த புண்ணியவதி முகத்த பார்க்க முடியல, உன்ன போல அவுங்க மவ ப்ரியாவும் பிரசவத்துக்கு வந்திருக்கு, என்னத்த சொல்ல. அந்த ஜெயராமன் சார் அப்படி ஓடி ஒழியிறவரு இல்ல,ம்ம்ம்,” என்றான் கோவிந்தன். “