திரும்பி வந்த அப்பா அந்த தாமரைக்குளம் பகுதியே நேற்று பெய்த மழையில் குளமாய் காணப்பட்டது. நல்ல மழை, தகிக்கும் சித்திரை மாதத்தில் அவ்வப்போது வரும் மழையே அலாதி சுகம் தான். காலை வழக்கம் போல் டீக்கடை முருகன் கடையில் நல்ல கூ ட்டம்.”என்ன முருகா, இப்படி வெயில் அடிக்குது, சரி சரி ஒரு டீயப் போடு”, என்று டீ குடிக்க ஒரு காரணம் தேடியவர்கள். இன்று,”என்ன முருகா, நேத்து ராத்திரி நல்ல மழை போல, சரி சரி ஒரு டீயப் போடு,” என்று ஆண்டவன் முருகனிடம் கேட்பது போல் கேட்டு விட்டு டீ யை குடிப்பது அந்த ஊர் சம்பிரதாயம் போல் இருந்தது. ஆனால் டீக்கடை முருகனோ, எந்த ஒரு பதிலும் கூறாமல், ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு , டீ போடத் துவங்குவான். நேற்று வரை, “ஏம்பா இந்த கத்திரி வெயிலுல என் கத்திரி செடியெல்லாம் கருகிடும்போல,” என்று கூறிய கோவிந்தன். இன்று “ஏம்பா நேத்து பெய்ஞ்ச மழைல , என் கத்திரி செடியெல்லாம் சாய்ஞ்சிட்டு பா,” என்று கூறிக் கொண்டிருந்தார். இதை கேட்ட மற்றொருவர்,”அட ஆமாம்ப்பா, ஒன்னு ப