Skip to main content

Posts

Showing posts from May, 2023

திரும்பி வந்த அப்பா

                                திரும்பி வந்த அப்பா             அந்த தாமரைக்குளம் பகுதியே நேற்று பெய்த மழையில் குளமாய் காணப்பட்டது. நல்ல மழை, தகிக்கும் சித்திரை மாதத்தில் அவ்வப்போது வரும் மழையே அலாதி சுகம் தான்.                          காலை வழக்கம் போல் டீக்கடை முருகன் கடையில் நல்ல கூ ட்டம்.”என்ன முருகா, இப்படி வெயில் அடிக்குது, சரி சரி ஒரு டீயப்   போடு”, என்று டீ   குடிக்க ஒரு காரணம் தேடியவர்கள். இன்று,”என்ன முருகா, நேத்து ராத்திரி நல்ல மழை போல, சரி சரி ஒரு டீயப்    போடு,” என்று ஆண்டவன் முருகனிடம் கேட்பது போல் கேட்டு விட்டு டீ யை குடிப்பது அந்த ஊர் சம்பிரதாயம் போல் இருந்தது.                         ஆனால் டீக்கடை முருகனோ, எந்த ஒரு பதிலும் கூறாமல், ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு , டீ போடத் துவங்குவான்.                           நேற்று வரை, “ஏம்பா இந்த கத்திரி வெயிலுல என் கத்திரி செடியெல்லாம் கருகிடும்போல,” என்று கூறிய கோவிந்தன். இன்று “ஏம்பா   நேத்து பெய்ஞ்ச மழைல , என் கத்திரி செடியெல்லாம் சாய்ஞ்சிட்டு பா,” என்று கூறிக் கொண்டிருந்தார். இதை கேட்ட மற்றொருவர்,”அட ஆமாம்ப்பா, ஒன்னு ப

பாண்டி ஆண்டியான கதை

                                பாண்டி ஆண்டியான கதை                 பாண்டி வயது 32, 6' அடி தடித்த கருத்த உருவம், சுருள் முடி, முறுக்கி விட்ட மீசை, அவனுக்கு தெரிந்த ஒரே தொழில் திருட்டு.                  அவன் தன் பெற்றோர்   யார் என்று தெரியாதவன். சொந்தம், நண்பர்கள் இல்லாதவன். யாரைப் பற்றியும் எதற்கும் கவலைபடாமல், திருடுவதும் நன்கு வயிறு புடைக்க மாமிசம் உண்டு விட்டு, குடித்து திரிந்து வந்தான்.                  திருடுவதில் கை தேர்ந்ததால், காவலர்களிடம் மாட்டாமல் தப்பித்து வந்தான். அது கார்த்திகை மாதம், திருவண்ணாமலை கலை கட்டியிருந்தது, பக்தர்களும், சாதுக்களும் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.                    இன்று தன் கைவரிசையை காட்டவேண்டியதுதான் என்றெண்ணிய பாண்டி, அவன் நின்றிருக்கும் மரம் அருகே ஒரு பெரிய வண்டி வந்து நிற்பதை பார்த்ததும் கண்காணிக்கத் தொடங்கினான். வண்டியிலிருந்து ஆண்களும் பெண்களும் காவி உடை அணிந்து விபூதி மற்றும் ருத்திராட்சம் அணித்திருந்தனர்.                  அவர்கள் அமைதியாக வண்டியிலிருந்து பொருட்களை இறக்க துவங்கினர். அனைவர் முகத்திலும் அமைதி மற்றும் புன்முற