ஒரு கைதியின் டைரி என் பெயர் அந்தோணி, வயது 55 , நான் தற்போது திருநெல்வேலியிலுள்ள சிறையில் தஞ்சம். எனது 35 தாவது வயதில் இங்கு வந்தேன், பத்து வருடம் 100 வருடமாக கழிந்தது. ஆனால் 10 வருடம் முன்பு நடந்த அந்த சம்பவம் ,இன்று நடந்தது போல் உள்ளது. நான் திருநெல்வேலி அடுத்துள்ள வயலூரில் என் மனைவி மேரி, மகள் எலிசபெத் மற்றும் மகன் ஜான் உடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன். நான் என் ஊர் அருகே இருக்கும் டவுன் மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்திருந்தேன். நான் வழக்கமாக் அதிகாலை 3:௦௦ மணிக்கு எனது டிவிஎஸ் வண்டியை எடுத்துக்கொண்டு மார்க்கெட் வருவேன், அங்கு வரும் காய்கறி லோட் வண்டியில் தேவையான காய்கறிகளை வாங்கிக் கொண்டு, அனைத்து வியாபாரிகளிடம் விலையை பற்றி ஆலோசனை செய்து, என் கடைக்கு வந்து காய்கறிகளை கடை பையன் துணையோடு அடுக்கி , நியாயமான முறையில் வியாபாரம் செய்து வந்தேன், சரியாக எட்டரை மணிக்கு எனது மகனும் மகளும் காலை டிபன் மற்றும் மதிய உணவை கொடுத்து விட்டு மார்க்கெட்டுக்கு அருகிலுள்ள அரசு பள்ளிக்கு செல்வார்கள். அதே போல் மாலை திரும்பும்போது, க