என்னால் முடியும் வெற்றிக்கான நிரந்தர வழி , தோல்வி அடைந்தபிறகும் இன்னுமொரு தடவை முயற்சி செய்வது ஒரு காட்டில், தாய், தந்தை பச்சைக்கிளி தங்கள் மூன்று குட்டி பச்சைக்கிளிகளோ யோடு சந்தோஷமாக வாழ்ந்து வந்தது. குஞ்சு பொறித்த சிறிது நாட்களே ஆனதால், தந்தை கிளி , தாய் கிளியை கூட்டிலேயே தன் குழந்தைகளை கவனித்து கொள்ள விட்டு விட்டு தான் மட்டும் இறை தேடி சென்று வந்தது. தாய் கிளி தன் குழந்தைகளுக்கு எப்படி நடக்க, உண்ண, பறக்க வேண்டுமென்று சொல்லி கொடுத்து வந்தது. நாட்கள் கடந்தன, மூன்று குட்டி பச்சைக்கிளிகளும் நன்கு வளர, அவைகளும் பறக்கும் திறமையை வளர்த்து கொள்ள , தாய் மற்றும் தந்தை கிளிகள் தினமும் பயிற்சி கொடுத்தது. முதல் இரண்டு பச்சைகிளிகளும் ஆர்வமாக கற்று, பறக்க முயற்சி செய்தன. ஆனால் கடைசி குட்டி பச்சைக்கிளிக்கு , பறக்க பயம், விழுந்து விடுவோம் என்ற பயம். அதனால் சாக்கு போக்கு சொல்லி கூட்டிலிருந்து, தன் சகோதர, சகோதரிகள் பறக்கும் பயிற்சியை வேடிக்கை பார்த்து வந்தது. தாய் மற்றும் தந்தை கிளிக