கனவு மலர்ந்தது ஒரு பெரிய நகரத்தின் மத்தியில் , அந்த வாராஹி அம்மன் கோவில் இருந்தது. வெள்ளி செவ்வாய் கிழமைகளில் கூட்டம் அலைமோதும். அப்போது வாராஹி அம்மனுக்கு விதவிதமான மலர்களை கொண்டு அலங்கரிப்பர். அந்த மலர் அலங்காரத்தை காணவே கூட்டம் வரும். அந்த மலர் அலங்காரத்துக்கு சொந்தக்காரர்கள் மருதமுத்தும் அவரது மனைவி மஞ்சுளாவும் தான். மருதமுத்துவும் அவனைது தந்தையும் இந்த மலர் அலங்கார வியாபாரத்தை , கோவில் வாயிலில் ஒரு சிறு கடை வைத்து துவங்கினர். அவர்களது கடின உழைப்பு இன்று , பல மாநிலங்களிருந்து அம்மனுக்கு விதவிதமான மலர்களை வாங்கி, அதை குளிர் சாதன அறையில் வைத்து பராமரித்து , அம்மனுக்கும்,மற்ற விற்பனைக்கும் கொடுத்து நன்கு சம்பாதித்து வந்தான். தான் மட்டுமல்லாமல் தன் மனை வி, மகளுக்கும் இந்த வேலையை விபரமாகவும், விளக்கமாகவும் சொல்லிக் கொடுத்து வந்தான். கொரோனா ஆழிப் பேரலை போல் வந்து மருதமுத்துவின் உயிரை எடுக்க, அவனது மனைவி வேறு வழியின்றி கடையை நிர்வகிக்க துவங்கினாள். மருதமுத்து இருந்தவரை அவர்களது மகள் பூங்கோதை பள்ளிக்